• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, மே 31, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

டெல்டா மாவட்ட ஆய்வு திடீரென தள்ளிவைப்பு – அரிசி ஆலையைப் பார்வையிட நாமக்கல், கோவை பயணம் மேற்கொண்ட மத்தியக் குழு

athibantv by athibantv
அக்டோபர் 26, 2025
in Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 859 📋

டெல்டா மாவட்ட ஆய்வு திடீரென தள்ளிவைப்பு – அரிசி ஆலையைப் பார்வையிட நாமக்கல், கோவை பயணம் மேற்கொண்ட மத்தியக் குழு

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், டெல்டா மாவட்டங்கள் உட்பட பல பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த குறுவை நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. இதனால், நெல் கொள்முதல் நிலையங்களில் பணிகள் தாமதமடைந்துள்ளதுடன், விவசாயிகள் கொட்டி வைத்திருந்த நெல்மணிகளில் முளை வீச்சும், ஈரப்பத அளவும் அதிகரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கிடையில், மத்திய உணவுத் துறை அமைச்சகம், தமிழகத்தில் நிலைமையை ஆய்வு செய்ய மூன்று குழுக்களை அக்டோபர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அனுப்பியது.

Related posts

நள்ளிரவு முதல் அமலாகிறது மீன்பிடி தடைக்காலம்: ஆழ்கடல் விசைப்படகுகள் அவசரமாகக் கரை திரும்பின!

நள்ளிரவு முதல் அமலாகிறது மீன்பிடி தடைக்காலம்: ஆழ்கடல் விசைப்படகுகள் அவசரமாகக் கரை திரும்பின!

மே 31, 2026
புதுக்கோட்டை அருகே பயங்கரம்: பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – ஒருவர் பரிதாபமாக பலி, 4 பேர் படுகாயம்!

புதுக்கோட்டை அருகே பயங்கரம்: பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – ஒருவர் பரிதாபமாக பலி, 4 பேர் படுகாயம்!

மே 31, 2026

அதில், திருச்சி, புதுக்கோட்டை, தேனி, மதுரை மாவட்டங்களில் ஆய்வு செய்ய மத்திய உணவுத் துறை துணை இயக்குநர் ஆர்.கே. சஹி தலைமையிலான குழுவும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஆய்வு செய்ய இணை இயக்குநர் பி.கே. சிங் தலைமையிலான குழுவும் திருச்சியில் தங்கி இருந்தன.

ஆனால், மத்திய உணவுத் துறையின் திடீர் உத்தரவையடுத்து, செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) உற்பத்தி ஆலைகளைப் பார்வையிட ஆர்.கே. சஹி குழு நாமக்கல்லுக்கும், பி.கே. சிங் குழு கோவைக்கும் புறப்பட்டுச் சென்றது. இவர்களுடன் நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் தரக்கட்டுப்பாட்டு முதுநிலை மேலாளர் செந்தில் மற்றும் மேலாளர் மணிகண்டனும் சென்றனர்.

இதன் விளைவாக, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற இருந்த மத்தியக் குழுவின் நெல் கொள்முதல் நிலைய ஆய்வுப் பணிகள் ஒரு நாள் தள்ளிப்போனது. அவை இன்று (அக்டோபர் 26) நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடரில் தகுதி பெற்றார் எலெனா ரைபகினா

Next Post

சீன பொருட்களுக்கு 100% கூடுதல் வரி: ட்ரம்ப் அறிவிப்பு

Next Post

சீன பொருட்களுக்கு 100% கூடுதல் வரி: ட்ரம்ப் அறிவிப்பு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“சோழ சாம்ராஜ்யத்தின் கடல் வல்லமை மகத்தானது” – ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!

“சோழ சாம்ராஜ்யத்தின் கடல் வல்லமை மகத்தானது” – ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!

மே 31, 2026
நள்ளிரவு முதல் அமலாகிறது மீன்பிடி தடைக்காலம்: ஆழ்கடல் விசைப்படகுகள் அவசரமாகக் கரை திரும்பின!

நள்ளிரவு முதல் அமலாகிறது மீன்பிடி தடைக்காலம்: ஆழ்கடல் விசைப்படகுகள் அவசரமாகக் கரை திரும்பின!

மே 31, 2026
புதுக்கோட்டை அருகே பயங்கரம்: பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – ஒருவர் பரிதாபமாக பலி, 4 பேர் படுகாயம்!

புதுக்கோட்டை அருகே பயங்கரம்: பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – ஒருவர் பரிதாபமாக பலி, 4 பேர் படுகாயம்!

மே 31, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “சோழ சாம்ராஜ்யத்தின் கடல் வல்லமை மகத்தானது” – ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!
  • நள்ளிரவு முதல் அமலாகிறது மீன்பிடி தடைக்காலம்: ஆழ்கடல் விசைப்படகுகள் அவசரமாகக் கரை திரும்பின!
  • புதுக்கோட்டை அருகே பயங்கரம்: பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – ஒருவர் பரிதாபமாக பலி, 4 பேர் படுகாயம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

“சோழ சாம்ராஜ்யத்தின் கடல் வல்லமை மகத்தானது” – ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!

“சோழ சாம்ராஜ்யத்தின் கடல் வல்லமை மகத்தானது” – ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!

மே 31, 2026
நள்ளிரவு முதல் அமலாகிறது மீன்பிடி தடைக்காலம்: ஆழ்கடல் விசைப்படகுகள் அவசரமாகக் கரை திரும்பின!

நள்ளிரவு முதல் அமலாகிறது மீன்பிடி தடைக்காலம்: ஆழ்கடல் விசைப்படகுகள் அவசரமாகக் கரை திரும்பின!

மே 31, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN