இந்தியாவுடனான ஏஐ ஒத்துழைப்பு அற்புதமான வாய்ப்பு – கனடா பல்கலைக்கழகம்
இந்தியா – கனடா இடையிலான செயற்கை நுண்ணறிவு (AI) ஒத்துழைப்பு, இரு நாடுகளுக்கும் சிறந்த வாய்ப்புகளை உருவாக்கும் என கனடா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் வரும் திங்களன்று நடைபெறவுள்ள செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில், கனடாவின் செயற்கை நுண்ணறிவு அமைச்சர் இவான் சாலமன் மற்றும் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் விவேக் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த டாக்டர் விவேக் கோயல், கனடா பல ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு துறையில் வலுவான திறன்களை வளர்த்துள்ளதாக கூறினார். அவற்றை இந்தியாவின் திறமைகள் மற்றும் வளர்ந்து வரும் வாய்ப்புகளுடன் இணைத்தால், ஏஐ துறையில் புதிய முன்னேற்றங்கள் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த ஒத்துழைப்பு, இரு நாடுகளுக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் புதுமைக்கு வழிவகுக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்