காரைக்காலில் அமித் ஷா நிகழ்ச்சியில் தடையை மீறி பறந்த ட்ரோன்: பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்
காரைக்காலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற பொதுக்கூட்டத்தின் போது, தடையை மீறி ட்ரோன் கேமரா பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் சந்தை திடலில் “நல்லாட்சி தொடரட்டும், புதுவை மலரட்டும்” என்ற தலைப்பில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது, பாதுகாப்பு கட்டுப்பாடுகளை மீறி அப்பகுதியில் ட்ரோன் ஒன்று பறந்து கொண்டிருந்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த ட்ரோனை சுட்டு வீழ்த்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக, ட்ரோன் கேமராவை இயக்கிய திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்த ஸ்டூடியோ உரிமையாளர் யோகேஷ் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.