வங்கக்கடலில் 15ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு
சில மாவட்டங்களில் மழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை
பகுதியில் வரும் 15ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
வெளியிடப்பட்ட அறிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாகவும், அதன் தொடர்ச்சியாக 15ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதன் தாக்கத்தால், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், 16ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.