குடிநீர் பற்றாக்குறைக்கு எதிர்ப்பு – கூடங்குளத்தில் ஆயிரம் வீடுகளில் கருப்புக்கொடி
கூட்டுக்குடிநீர் திட்டத்தில் சேர்க்க கோரி கிராம மக்கள் போராட்டம்
வின் பகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து, கிராம மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடுமையான குடிநீர் தட்டுப்பாடு காரணமாக அவதிப்பட்டு வந்த பொதுமக்கள், சில நாட்களுக்கு முன்பு அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினர். அப்போது தொகுதி எம்எல்ஏ முன்னெடுத்ததாக கூறப்படும் ரூ.605 கோடி மதிப்பிலான கூட்டுக்குடிநீர் வழங்கும் திட்டத்தில் கூடங்குளம் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதையடுத்து, கூடங்குளத்தையும் திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக்கொடி கட்டி மக்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
குடிநீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.