10 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக நாடு தழுவிய போராட்டம் – சென்னை நகரில் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கம்
போக்குவரத்து சேவை சீராக இருந்ததால் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை என பயணிகள் கருத்து
10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த போராட்டத்திற்கு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்ததால், பொதுப் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்தது.
ஆனால், பணிக்கு வராதவர்களுக்கு “No Work, No Pay” விதிமுறை அமல்படுத்தப்படும் என அரசு முன்கூட்டியே அறிவித்திருந்தது. இதன் காரணமாக போக்குவரத்து தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.
சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பேருந்துகள் சீராக இயக்கப்பட்டதால், தினசரி பணிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என பயணிகள் தெரிவித்துள்ளனர்.