வேப்பேரி காலை உணவு திட்ட சமையல் கூடத்தில் கழிவு நீர் தேக்கம் – சுகாதார குறைபாடு குற்றச்சாட்டு
முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் செயல்படும் சமையல் கூடத்தில் கழிவு நீர் தேங்கியதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கான உணவு வேப்பேரியில் அமைந்துள்ள மைய சமையல் கூடத்தில் தயாரிக்கப்படுகிறது.
இந்த சமையல் கூடத்திலிருந்து வெளியேறும் கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கழிவுநீர் தேங்கி, பின்னர் வெளியேறி சாலையிலும் பரவியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசத் தொடங்கியதாக கூறப்படுகிறது.
மேலும், சாலையில் தேங்கிய கழிவுநீரால் அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் மற்றும் பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.