சட்டமன்றத் தேர்தல்: தேமுதிகவுக்கு ஒற்றை இலக்க இடங்கள் மட்டும்? – அரசியல் வட்டாரத் தகவல்
வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேமுதிகவுக்கு ஒற்றை இலக்க எண்ணிக்கையிலேயே தொகுதிகள் வழங்க அதிமுக மற்றும் திமுக முன்வந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. மேலும், ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியும் வழங்கப்படும் என ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
தற்போது சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேமுதிக இரு முக்கிய கட்சிகளுடனும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதிக தொகுதிகள் வழங்கும் அணியுடன் இணையலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், தேமுதிகவின் வாக்கு வங்கி குறைவாக உள்ளதை காரணம் காட்டி, ஒற்றை இலக்க எண்ணிக்கையில் மட்டுமே தொகுதிகள் வழங்க முடியும் என இரு தரப்பும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலைமை தேமுதிக வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும், அடுத்தகட்ட அரசியல் முடிவு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.