வந்தே மாதரம் முழுப்பாடல் பாடல் கட்டாயம் – மத்திய அரசின் புதிய அறிவிப்பு
ஜவஹர்லால் நேரு தலைமையிலான ஆட்சி காலத்தில் விலக்கப்பட்ட பகுதிகள் உள்ளிட்ட முழுமையான ‘வந்தே மாதரம்’ பாடலை பாட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு விழாக்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ‘வந்தே மாதரம்’ பாடலை கட்டாயமாக இசைக்க புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
புதிய அறிவிப்பின் படி, தேசிய கீதத்திற்கு முன்பாக ‘வந்தே மாதரம்’ பாடலின் அனைத்து 6 சரணங்களும் பாடப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பாடல் ஒலிக்கும் மொத்த நேரம் சுமார் 3 நிமிடம் 10 விநாடிகள் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், குடியரசுத் தலைவர் அல்லது மாநில ஆளுநர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும் நிறைவிலும் ‘வந்தே மாதரம்’ பாடல் ஒலிக்கப்பட வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
நேரு ஆட்சி காலத்தில் நீக்கப்பட்ட 4 சரணங்கள் உட்பட, முழு 6 சரணங்களும் இனி பாடப்பட வேண்டும் என உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.