உடல்நிலை பாதிப்பு – அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதி; டி20 போட்டியில் இல்லை
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் அபிஷேக் சர்மா உடல்நல பிரச்சினையால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதால், நடப்பு டி20 தொடரில் ஒரு போட்டியில் அவர் விளையாட முடியாது என தகவல் வெளியாகியுள்ளது.
டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்காக களமிறங்கி வரும் அபிஷேக் சர்மா, கடுமையான வயிற்றுப் பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இருப்பினும், பாகிஸ்தான் அணியுடன் நடைபெறவுள்ள அடுத்த ஆட்டத்திற்குள் அவர் உடல்நலம் திரும்பப் பெறுவார் என்ற நம்பிக்கை அணித் தரப்பில் நிலவுகிறது.