3 மாத இடைவெளிக்குப் பின் கூடிய மதுரை மாநகராட்சி மாமன்றம் – 15 நிமிடங்களில் கூட்டம் முடிவு

Date:

3 மாத இடைவெளிக்குப் பின் கூடிய மதுரை மாநகராட்சி மாமன்றம் – 15 நிமிடங்களில் கூட்டம் முடிவு

மூன்று மாதங்களாக நடைபெறாமல் இருந்த மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மீண்டும் தொடங்கிய நிலையில், அது வெறும் 15 நிமிடங்களிலேயே நிறைவடைந்தது.

சொத்து வரி முறைகேடு தொடர்பான புகாரைத் தொடர்ந்து, மேயர் இந்திராணி பொன் வசந்தம் தனது பதவியை விலகியிருந்தார். அதன் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக மாமன்றக் கூட்டங்கள் நடைபெறவில்லை.

இந்த விவகாரம் குறித்து ஊடகங்களில் செய்தி வெளியாகியதையடுத்து, பொறுப்பு மேயர் நாகராஜன் தலைமையில் பட்ஜெட் தொடர்பான கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்தின் போது, கூட்டு குடிநீர் திட்டம் அவசரமாக தொடங்கப்பட்டதாகக் குற்றம்சாட்டி அதிமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதற்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் சத்தமிட்டு எதிர்ப்பு தெரிவித்ததால், அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதன் பின்னர், பாஜக கவுன்சிலர் பூமாஸ்ரீ தனது வார்டில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாகக் கூறி, ஆதாரமாக புகைப்படங்களை கையில் ஏந்தி அவையில் தர்ணா முறையில் அமர்ந்தார்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, சில திமுக கவுன்சிலர்கள் அந்த புகைப்படங்களை கிழித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஏற்பட்ட பரபரப்பின் காரணமாக, பாஜக கவுன்சிலர் பூமாஸ்ரீயை அவை பாதுகாப்பு பணியாளர்கள் வெளியேற்றினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மதுரை விமான நிலைய நிலம் கையகப்படுத்தல் விவகாரம் – அமைச்சர் மூர்த்தி மீது சின்ன உடைப்பு கிராம மக்களின் எதிர்ப்பு தீவிரம்

மதுரை விமான நிலைய நிலம் கையகப்படுத்தல் விவகாரம் – அமைச்சர் மூர்த்தி...

அமைச்சர் மூர்த்தி கருத்து விவகாரம் – சின்ன உடைப்பு கிராம மக்களில் அதிருப்தி; மதுரை ஆட்சியர் அலுவலகம் போராட்டக்களம்

அமைச்சர் மூர்த்தி கருத்து விவகாரம் – சின்ன உடைப்பு கிராம மக்களில்...

அமெரிக்கா தேவைக்கு பயன்படுத்தி புறக்கணிக்கிறது – பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு

அமெரிக்கா தேவைக்கு பயன்படுத்தி புறக்கணிக்கிறது – பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு அமெரிக்கா...

மூடா வழக்கில் புதிய சர்ச்சை – லோக் ஆயுக்தா அதிகாரிகளுக்கு கோடிகள் லஞ்சம் வழங்கியதாக குற்றச்சாட்டு

மூடா வழக்கில் புதிய சர்ச்சை – லோக் ஆயுக்தா அதிகாரிகளுக்கு கோடிகள்...