பாரதிய பனியன் வியாபாரிகள் சங்கத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி
திருப்பூரில் செயல்பட்டு வரும் பாரதிய பனியன் வியாபாரிகள் சங்கத்தில் புதிய உறுப்பினர்களை இணைக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்தார். இதில் 150-க்கும் அதிகமான வியாபாரிகள் சங்க உறுப்பினர்களாக தங்களை பதிவு செய்து கொண்டனர்.
நிகழ்ச்சி தொடக்கத்தில் காடேஸ்வரா சுப்பிரமணியத்திற்கு சால்வை அணிவித்து, சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மரியாதை செய்து வரவேற்றனர்.