சோழவந்தான் பகுதியில் முதல் அறுவடை நெல் அழகர் கோயிலுக்கு அர்ப்பணிப்பு
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே, ஆண்டின் முதல் அறுவடை நெல்லை பாரம்பரிய முறையில் அழகர் கோயிலுக்கு கொண்டு செல்லும் நிகழ்வு நடைபெற்றது.
சோழவந்தான் அருகேயுள்ள தேனூர் கிராமத்தில், ஒவ்வொரு ஆண்டும் முதலில் அறுவடை செய்யப்படும் நெல்லை மதுரை கள்ளழகர் கோயிலுக்கு சமர்ப்பிக்கும் மரபு நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வழக்கத்தின் படி, இந்த ஆண்டிற்கான முதல் நெற்பயிரை விவசாயிகள் தங்களது கைகளால் அறுவடை செய்தனர்.
அறுவடை செய்யப்பட்ட நெல்லை தேனூர் மலையன் சாவடி பகுதிக்கு கொண்டு சென்ற விவசாயிகள், அங்கு அந்த நெல்லுக்கு தீபாராதனை செய்து வழிபாடு நடத்தினர். பின்னர், பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் அந்த முதல் அறுவடை நெல்லை கள்ளழகர் கோயிலுக்கு எடுத்துச் சென்று அர்ப்பணித்தனர்.