மாணவியர் விடுதி அருகே அரசு அனுமதியுடன் திறக்கப்படும் மதுபான மன்றம் – மக்கள் கடும் எதிர்ப்பு
கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மாணவியர் விடுதிக்கு மிக அருகாமையில் தனியார் மதுபான மன்றம் தொடங்க அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதற்கு, அப்பகுதி மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பட்டணம் சாலையில் தமிழக அரசின் சமூகநீதி துறையின் கீழ் இயங்கி வரும் மாணவியர் விடுதி அமைந்துள்ள நிலையில், அதன் அருகிலேயே தனியார் நிறுவனம் நடத்தும் மதுபானக் கூடம் அமைக்கப்பட உள்ளது.
‘மனமகிழ் மன்றம்’ என்ற பெயரில் தொடங்கப்படவுள்ள இந்த மதுபான நிலையத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி, பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவிகள் தங்கியிருக்கும் விடுதி கட்டடத்திற்கு அருகில் மதுபானக் கூடம் அமைக்க அரசு ஒப்புதல் அளித்திருப்பது பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு குறித்த கவலைகளை எழுப்புவதாகவும், இதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.