நவீனமயமாகும் சோமனூர் ரயில் நிலையம் – மத்திய அரசுக்கு மக்களின் பாராட்டு
மத்திய அரசின் ‘அம்ப்ரெல்லா’ திட்டத்தின் கீழ், கோவை மாவட்டம் சோமனூரில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தென்னக ரயில்வே கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பல ரயில் நிலையங்களை நவீனப்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக சோமனூர் ரயில் நிலையமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சுமார் ஆறரை கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் இந்த பணிகளில், தரைப்பகுதி சீரமைப்பு, நடைமேடைகளின் நீளம் மற்றும் உயரம் உயர்த்துதல், கூடுதல் கழிப்பறைகள் அமைத்தல் உள்ளிட்ட வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இந்த மேம்பாட்டு பணிகள் பயணிகளுக்கு பெரும் பயனளிக்கும் எனக் கூறியுள்ள அப்பகுதி மக்கள், மத்திய அரசின் இந்த முயற்சியை வரவேற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்