டிரம்ப் மீது தாக்குதல் நடத்த முயன்ற நபருக்கு ஆயுள் சிறை

Date:

டிரம்ப் மீது தாக்குதல் நடத்த முயன்ற நபருக்கு ஆயுள் சிறை

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை கொலை செய்ய முயன்ற வழக்கில், தொடர்புடைய நபருக்கு அமெரிக்க நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி, புளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ள தனது இல்லத்திற்குச் சொந்தமான கோல்ஃப் மைதானத்தில் டிரம்ப் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில், அவரது வீட்டு அருகே துப்பாக்கிச் சூடு நடந்தது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஆயுதத்துடன் அங்கிருந்து தப்பியோடிய நபரை காவல்துறையினர் விரைவாக கைது செய்தனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட நபரின் பெயர் ரியான் வெஸ்லி ரூத் என்பதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு அவர் குற்றம் செய்தவர் என நீதிமன்றம் தீர்மானித்தது.

இந்நிலையில், வழக்கின் இறுதி தீர்ப்பாக ரியான் வெஸ்லி ரூத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

போதமலை சாலைப் பணி முழுமையடையாத நிலையில் அவசரமாக நடத்தப்பட்ட திறப்பு விழா!

போதமலை சாலைப் பணி முழுமையடையாத நிலையில் அவசரமாக நடத்தப்பட்ட திறப்பு விழா! நாமக்கல்...

நவீனமயமாகும் சோமனூர் ரயில் நிலையம் – மத்திய அரசுக்கு மக்களின் பாராட்டு

நவீனமயமாகும் சோமனூர் ரயில் நிலையம் – மத்திய அரசுக்கு மக்களின் பாராட்டு மத்திய...

இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு தலைமைத்துவத்திற்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பாராட்டு

இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு தலைமைத்துவத்திற்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பாராட்டு செயற்கை நுண்ணறிவு துறையில்...

வெளிநாட்டு சிறையில் உள்ள சகோதரரை விடுவிக்க பிரதமரிடம் நடிகை செலினா ஜெட்லி வேண்டுகோள்

வெளிநாட்டு சிறையில் உள்ள சகோதரரை விடுவிக்க பிரதமரிடம் நடிகை செலினா ஜெட்லி...