எரிபொருள் ஏற்றிய ரயிலில் பெரும் வெடிப்பு – ரஷ்யாவில் பதற்றம்

Date:

எரிபொருள் ஏற்றிய ரயிலில் பெரும் வெடிப்பு – ரஷ்யாவில் பதற்றம்

ரஷ்யாவில் எரிபொருள் கொண்டு சென்ற சரக்கு ரயிலில் ஏற்பட்ட கடும் தீவிபத்து மற்றும் வெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாஸ்கோ நகரை ஒட்டிய தம்போவ் மாகாணத்தில் உள்ள கோச்செடோவ்கா ரயில் நிலையத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எரிபொருளால் நிரம்பிய ரயில் பெட்டிகள் அடுத்தடுத்து வெடித்ததால், சுமார் ஆயிரம் அடி உயரத்திற்கு தீப்பிழம்புகள் எழுந்தன. அதே நேரத்தில், பல கிலோமீட்டர் சுற்றளவில் அடர்ந்த கரும்புகை பரவி காணப்பட்டது.

இந்த விபத்தில் சுமார் 30 ரயில் பெட்டிகள் முற்றிலும் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெடிப்பு ஏற்பட்டதையடுத்து அந்தப் பகுதியில் ரயில் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டது.

இதன் விளைவாக 8-க்கும் அதிகமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், ஆரம்ப கட்ட விசாரணையில் இது விபத்தா அல்லது திட்டமிட்ட சதிச்செயலா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

திமுக பிரமுகரின் ஆதரவாளர்கள் உயிர் அச்சுறுத்தல் – தேனி எஸ்பியிடம் பொதுமக்கள் முறையீடு

திமுக பிரமுகரின் ஆதரவாளர்கள் உயிர் அச்சுறுத்தல் – தேனி எஸ்பியிடம் பொதுமக்கள்...

தமிழக பெண்களுக்கும் வெளியூர்ப் பெண்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் – திமுக அரசை சாடிய நயினார் நாகேந்திரன்

தமிழக பெண்களுக்கும் வெளியூர்ப் பெண்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் – திமுக அரசை...

‘தி வேர்ல்ட் ஃபேக்டர் புக்’ தகவல் சேவைக்கு முடிவு – சிஐஏ அறிவிப்பு

‘தி வேர்ல்ட் ஃபேக்டர் புக்’ தகவல் சேவைக்கு முடிவு – சிஐஏ...

அரபு நாடுகளுடன் வர்த்தக கூட்டணி – பாகிஸ்தானுக்கு இந்தியாவின் புதிய “செக்”

அரபு நாடுகளுடன் வர்த்தக கூட்டணி – பாகிஸ்தானுக்கு இந்தியாவின் புதிய “செக்” ஆறு...