9 கோரிக்கைகளை முன்வைத்து சென்னையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
ஊக்கத்தொகை உயர்வு உள்ளிட்ட 9 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, சென்னையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாற்றுத்திறனாளிகள் ஆணையர் அலுவலக வளாகத்தில், பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் சார்பில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள், தற்போதுள்ள ரூ.1,500 ஊக்கத்தொகையை ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், பட்டப்படிப்பு முடித்த அனைத்து பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.