முன்னறிவிப்பு இன்றி பாதுகாப்பு பயன்பாட்டுக்கான நிலம் மீட்பு – திமுக பிராந்திய அரசின் நடவடிக்கைக்கு சர்ச்சை
சென்னை நகரின் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டிருந்த 9.69 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை, எந்த முன் அறிவிப்புமின்றி திமுக பிராந்திய அரசு மீட்டெடுத்தது தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடல் வழியாக தேச விரோதிகள் நாட்டுக்குள் நுழைவதை தடுக்கும் நோக்கில், சென்னை அடையாறு அருகிலுள்ள பகுதிகளில் கடற்படை வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில், இப்பகுதியில் உள்ள நிலம் தேசிய பாதுகாப்பு தேவைக்காக பயன்படுத்த திட்டமிடப்பட்டது.
2014-ஆம் ஆண்டு கடல் நீர் சூழ்ந்த பாதிப்புகளைத் தொடர்ந்து, தலைநகர் சென்னையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா கடற்படைக்காக 9.69 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி வழங்கினார். சுமார் 242 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த இடத்தில் பயிற்சி மையம் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், திட்டம் செயல்படுத்தப்படுவதில் தாமதம் ஏற்பட்டதை காரணமாகக் கொண்டு, திமுக பிராந்திய அரசு கடந்த 2022-ஆம் ஆண்டு எந்தவித முன் தகவலும் அளிக்காமல் அந்த நிலத்தை கையகப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கைக்கு எதிராக கடற்படையின் சிறப்பு பிரிவு அதிகாரிகள் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து விளக்கம் கோரியபோதும், எந்த நேர்மறையான தீர்வும் கிடைக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைநகர் சென்னையின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட நிலம் மீட்கப்பட்ட சம்பவம், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது