“திமுக ஆட்சிக்காலத்தில் தமிழக பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது” – மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் குற்றம்சாட்டு
திமுக ஆட்சி நடைபெறும் தமிழகத்தில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என, அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெற்றபோது உரையாற்றிய அவர், எமர்ஜென்சி காலத்தில் ஸ்டாலின் சிறை சென்றதாக கூறப்படுவதாக நினைவூட்டினார். ஆனால் தற்போதைய சூழலில் திமுக, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து செயல்படுகிறது என விமர்சனம் முன்வைத்தார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியிடம் பாலியல் வன்முறை நடந்த சம்பவத்தை எடுத்துக்காட்டிய அவர், திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை என தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டின் அரசியல் சூழலில் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய இயக்க சக்தியாக உள்ளார் என்றும், அவருக்கு துணை நிற்கும் நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி செயல்பட்டு வருவதாகவும் மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை கூறினார்.