மேல்விஷாரம் நகராட்சி அலுவலகத்தில் கமிஷன் பேச்சுவார்த்தை – வைரலான வீடியோ அதிர்ச்சி
மேல்விஷாரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகளுக்காக அதிகாரிகள் கமிஷன் குறித்து பேசும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட மேல்விஷாரம் நகராட்சிப் பகுதிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தரமற்ற முறையில் நடைபெறுவதாக நீண்ட நாட்களாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில், தற்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.
நகராட்சி அலுவலகத்திலேயே திட்டப் பணிகளுக்கான கமிஷன் தொகை குறித்து அதிகாரிகள் பேரம் பேசும் காட்சிகள் பதிவாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மேல்விஷாரம் நகராட்சி நிர்வாகம் மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாக விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.