பறவைக் காய்ச்சல் தாக்கம் – காகங்கள் உயிரிழப்பு; பொதுமக்களிடையே அச்சம்
பீகார் மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக காகங்கள் தொடர்ந்து உயிரிழந்து வருவதால், அப்பகுதி மக்கள் கவலையும் அச்சமும் அடைந்துள்ளனர்.
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள நவுகாச்சியா பகுதியில் பறவைக் காய்ச்சல் பரவல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக அந்தப் பகுதியில் காகங்கள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக தகவல்கள் வெளியாகின. சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த காகங்கள், ஆய்வுக்காக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.
மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், அவை பறவைக் காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமையை அடுத்து, கால்நடை பராமரிப்புத் துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.