பழனி தைப்பூச விழாவில் முன்னேற்பாடுகள் குறைவு – பக்தர்கள் குற்றச்சாட்டு
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனியில் தேவையான ஏற்பாடுகள் முறையாக செய்யப்படவில்லை என பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லாத காரணத்தால், பல பக்தர்கள் மயக்கமடைந்ததாக கூறி அவர்கள் அதிர்ச்சியையும் வேதனையையும் வெளிப்படுத்தினர்.
மேலும், உடல்நலம் பாதிக்கப்பட்ட பக்தர்களை காவல்துறையினர் தங்களின் தோள்களில் சுமந்து சென்று முதலுதவி சிகிச்சை வழங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.