வாஷிங்டன் அருங்காட்சியகத்தில் கண்டறியப்பட்ட தமிழகச் சிலைகள்
தமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட சோமாஸ்கந்தர் வெண்கலச் சிலை உள்ளிட்ட மூன்று பழமையான சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருவாரூர் மாவட்டம் ஆலத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள விஸ்வநாதர் ஆலயத்தில், சிவபெருமான், பார்வதி மற்றும் முருகப்பெருமான் இணைந்து அமர்ந்த வடிவில் உள்ள சோமாஸ்கந்தர் வெண்கலச் சிலை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மர்மமான முறையில் காணாமல் போனது.
பின்னர் மேற்கொண்ட விசாரணைகளில், அந்த சிலை அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தது என்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஆதார ஆவணங்களை தமிழக காவல்துறையினர் அமெரிக்க அரசின் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர்.
ஆவணங்களை ஆய்வு செய்து உறுதி செய்த அமெரிக்க அதிகாரிகள், சோமாஸ்கந்தர் சிலை மட்டுமல்லாமல், தமிழகத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி நாயனார், பரவை நாச்சியார் மற்றும் சிவ நடராஜர் ஆகியோரின் பழம்பெரும் சிலைகளையும் இந்தியாவிடம் மீள ஒப்படைக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.