சீனாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் 77-வது குடியரசு தின கொண்டாட்டம்
நாட்டின் 77-வது குடியரசு தின விழா, சீனாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பெருமையும் உற்சாகமும் நிறைந்த சூழலில் கொண்டாடப்பட்டது.
சீனாவின் வணிகத் தலைநகரான ஷாங்காயில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, ஷாங்காயின் இந்தியத் தூதர் பிரதிக் மாத்தூர் தலைமை தாங்கினார்.
அவர் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையை வாசித்தார்.
இந்த விழாவில் இந்திய வம்சாவளியினர், சீன குடிமக்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, தேசபக்தியை வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய தூதர் பிரதிக் மாத்தூர், பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்கு மேற்கொண்ட பயணம், இந்தியா–சீனா உறவுகளில் புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
தேச எல்லைகளைத் தாண்டியும்,
இந்தியாவின் குடியரசு பெருமை உலகெங்கும் ஒலிக்கட்டும்.
அனைவருக்கும் 77-வது குடியரசு தின வாழ்த்துகள்!
ஜெய்ஹிந்த்