சிக்கலில் மாநிலங்களின் நிதி நிலைமை – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
மாநில அரசுகளின் நிதி நிலைமை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநில அரசுகளின் பட்ஜெட்டுகளை ஆய்வு செய்து ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது மாநிலங்களின் நிதி நிலைமை தற்போது சரிவடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், இலவசங்கள் மற்றும் நிதி உதவி திட்டங்கள் மாநிலங்களின் கடன் சுமையை தொடர்ந்து அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநிலங்களின் நிதி பற்றாக்குறை 2024–25ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதமாக உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், 2025–26ம் ஆண்டின் முதல் அரையாண்டில் மாநில அரசுகள் பெற்றுள்ள கடன் அளவு, முந்தைய ஆண்டை விட 21 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.
மாநில அரசுகள் வழங்கி வரும் இலவசங்கள், உதவித் தொகைகள் போன்ற திட்டங்கள் நீண்டகாலத்தில் நிதி நிலைமையை கடுமையாக பாதிக்கும் என்றும், இதே போக்கு தொடர்ந்தால் மாநிலங்களின் நிதி நிலைமை பெரிய அளவில் நெருக்கடிக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் எச்சரித்துள்ளது.