மனதின் குரல் நிகழ்ச்சியில் கல்வராயன் மலைப் பெண் விவசாயிகளுக்கு பிரதமர் மோடி புகழாரம்

Date:

மனதின் குரல் நிகழ்ச்சியில் கல்வராயன் மலைப் பெண் விவசாயிகளுக்கு பிரதமர் மோடி புகழாரம்

கல்வராயன் மலைப்பகுதியை ஒட்டிய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண் விவசாயிகள் ஒன்றிணைந்து நடத்தி வரும் ‘பெரியகல்வராயன் சிறுதானிய மகளிர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்’ நாட்டளவில் கவனம் பெற்றுள்ளது.

இந்த நிறுவனத்தில்,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 360 பெண் விவசாயிகளும்,

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 400 பெண் விவசாயிகளும்

உறுப்பினர்களாக உள்ளனர்.

மலைப்பகுதியில் விளையும் திணை, சாமை, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியங்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி சந்தைப்படுத்தி வருகின்றனர்.

மத்திய அரசின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், மலைவாழ் பெண்களின் பொருளாதார தற்சார்புக்கும், கூட்டுத் தொழில்முனைவுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

இந்நிலையில், ஆண்டின் முதல் மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, சிறுதானிய உற்பத்தியில் சாதனை படைத்து வரும் பெரியகல்வராயன் சிறுதானிய மகளிர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தைச் சேர்ந்த பெண் விவசாயிகளின் முயற்சிகளையும் சாதனைகளையும் குறிப்பிட்டு பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியை நூற்றுக்கணக்கான பெண் விவசாயிகள் நேரலையில் கண்டு மகிழ்ந்தனர்.

நாட்டின் கடைக்கோடி மலைப்பகுதியில் வசிக்கும் தங்களைப் போன்ற எளிய விவசாயிகளை பிரதமர் குறிப்பிட்டது பெருமையையும், மகிழ்ச்சியையும் அளித்ததாக பெண் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

நீதிமன்றம் அனுமதி அளித்தும் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு: கோயில் திருப்பணிக்கு ஊர்மக்கள் மனு!

நீதிமன்றம் அனுமதி அளித்தும் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு: கோயில் திருப்பணிக்கு பாதுகாப்பு கோரி...

குடிநீர் கேட்டுப் போராடியவர்களுக்குத் தண்டனையா? – ஸ்ரீமுஷ்ணத்தில் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கைக்கு எதிர்ப்பு

குடிநீர் கேட்டுப் போராடியவர்களுக்குத் தண்டனையா? - ஸ்ரீமுஷ்ணத்தில் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கைக்கு...

தன்னம்பிக்கையும் வீரமும்: சிறுத்தையை வெறுங்கையால் வீழ்த்திய 18 வயது இளைஞர்!

தன்னம்பிக்கையும் வீரமும்: சிறுத்தையை வெறுங்கையால் வீழ்த்திய 18 வயது இளைஞர்! ஹிமாச்சல பிரதேசத்தின்...

“ஈரான் ஏறக்குறைய அழிக்கப்பட்டுவிட்டது” – போரில் வெற்றி பெற்றதாக டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு

"ஈரான் ஏறக்குறைய அழிக்கப்பட்டுவிட்டது" - போரில் வெற்றி பெற்றதாக டொனால்ட் டிரம்ப்...