கரூர் காவல் ஆய்வாளர் மணிவண்ணன் காத்திருப்போர் பட்டியலில் மாற்றம்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தவெக் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்த நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன், தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில், கடந்த ஆண்டு செப்டம்பரில் தவெக் தலைவர் விஜய் பரப்புரை நடத்திய போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது; அதில் 41 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து, கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் தவெக் நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்தார்.
இதன் தொடர்ச்சியாக, 59 காவல் ஆய்வாளர்களின் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் மணிவண்ணன் உட்பட 18 பேரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.