பெண் காவலரின் உடனடி செயல்பாடால் உயிர் தப்பிய இளம்பெண்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பணியாற்றிய பெண் காவலரின் துரிதமான நடவடிக்கையால், விபரீத முடிவெடுக்க முயன்ற இளம்பெண்ணின் உயிர் பாதுகாக்கப்பட்டது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) பெண் காவலரான ஜிஷா வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, தனியாக அமர்ந்து கண்ணீர் சிந்தித்துக் கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணை அவர் கவனித்தார்.
உடனடியாக அந்த பெண்ணை அணுகி விசாரித்த காவலர் ஜிஷாவிடம், சமீபத்தில் தனது சகோதரர் உயிரிழந்ததால் மன உளைச்சலுக்கு உள்ளாகி, அதீத விரக்தியில் விஷம் அருந்தியதாக அந்த பெண் தெரிவித்தார்.
இந்த தகவலைக் கேட்டதும் உடனடியாக செயல்பட்ட ஜிஷா, ரயில் நிலைய பணியாளர்களின் உதவியுடன் அந்த இளம்பெண்ணை அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால் இளம்பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டது. பெண் காவலரும் ரயில்வே ஊழியர்களும் காட்டிய மனிதநேயமும் துரித செயல்பாடும் பொதுமக்களிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளது.