கோலாகலமாக கொண்டாடப்பட்ட பட்டம் பறக்கும் திருவிழா

Date:

கோலாகலமாக கொண்டாடப்பட்ட பட்டம் பறக்கும் திருவிழா

குஜராத் மாநிலத்தில் நடைபெறும் பட்டம் பறக்கும் திருவிழா, “உத்தராயண்” என்ற பெயரில் பிரசித்தி பெற்றதாகும். மகர சங்கராந்தியை முன்னிட்டு நடைபெறும் இந்த விழா, சர்வதேச அளவில் கவனம் பெறும் பெரும் கொண்டாட்டமாக திகழ்கிறது.

அகமதாபாத் உள்ளிட்ட பல நகரங்களில், வண்ண வண்ணமான பட்டங்கள் ஆகாயத்தில் பறக்கவிடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த விழா குஜராத் மக்களின் பாரம்பரிய மற்றும் கலாசார அடையாளமாகக் கருதப்படுகிறது.

இதே நேரத்தில், பட்டம் பறக்கும் போது பயன்படுத்தப்படும் மாஞ்சா நூலால் பறவைகள் பாதிக்கப்படுவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு குஜராத் முழுவதும் நடைபெற்ற உத்தராயண் விழாவின் போது, மாஞ்சா நூலில் சிக்கி 5,400-க்கும் அதிகமான புறாக்கள் உள்ளிட்ட பல்வேறு பறவைகள் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து, ‘கருணா அபியான்’ திட்டத்தின் கீழ் செயல்படும் தன்னார்வ அமைப்புகள், காயமடைந்த பறவைகளை மீட்டு உடனடி சிகிச்சை அளித்து பாதுகாத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சீனாவில் நோரோ வைரஸ் தாக்கம் – நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு

சீனாவில் நோரோ வைரஸ் தாக்கம் – நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு சீனாவில்...

மத்திய அரசின் விரைவு நடவடிக்கை – ஈரானில் இருந்து பாதுகாப்பாக நாடு திரும்பும் இந்தியர்கள்

மத்திய அரசின் விரைவு நடவடிக்கை – ஈரானில் இருந்து பாதுகாப்பாக நாடு...

காணும் பொங்கல் கோலாகலம் – தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்களில் திரண்ட மக்கள்

காணும் பொங்கல் கோலாகலம் – தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்களில் திரண்ட...

உழவர் திருநாளிலும் போதையைப் பரப்பியதாக அறிவாலய அரசுக்கு நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

உழவர் திருநாளிலும் போதையைப் பரப்பியதாக அறிவாலய அரசுக்கு நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு உழவர்...