30 ஆண்டுகளாக நீடித்த உத்தவ் தாக்கரே ஆதிக்கம் முடிவுக்கு வந்தது

Date:

30 ஆண்டுகளாக நீடித்த உத்தவ் தாக்கரே ஆதிக்கம் முடிவுக்கு வந்தது

மும்பை மாநகராட்சி பாஜக கட்டுப்பாட்டில்

மும்பை மாநகராட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்து, 30 ஆண்டுகளுக்குப் பிறகு மாநகராட்சி நிர்வாகத்தை கைப்பற்றியுள்ளது.

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி, மொத்தம் 227 வார்டுகளில் 77 வார்டுகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இதன் மூலம், நீண்ட காலமாக மும்பை மாநகராட்சியை தன் அரசியல் கோட்டையாக வைத்திருந்த சிவசேனாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் பாஜக 89 வார்டுகளில் முன்னிலை வகித்து வருகிறது. அதே நேரத்தில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 29 வார்டுகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி வெறும் 7 வார்டுகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

மாநகராட்சியில் பெரும்பான்மை பெற தேவையான 114 இடங்களை பாஜக தலைமையிலான கூட்டணி எளிதாக கடந்துள்ளதால், மாநகராட்சி நிர்வாகம் பாஜக வசம் செல்லும் நிலை உறுதியானதாகியுள்ளது.

30 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சியில் ஆதிக்கம் செலுத்தி வந்த உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, இந்தத் தேர்தலில் கடும் அரசியல் சரிவை சந்தித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வாகன சுங்கவரி உயர்வால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி – கொடைக்கானலில் எதிர்ப்புக் குரல்

வாகன சுங்கவரி உயர்வால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி – கொடைக்கானலில் எதிர்ப்புக்...

தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாட்டுப் பொங்கல் விழா: நந்தி பெருமானுக்கு விசேஷ அபிஷேகம்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாட்டுப் பொங்கல் விழா: நந்தி பெருமானுக்கு விசேஷ...

டாப்சிலிப் வனப்பகுதியில் உற்சாகமாக நடைபெற்ற யானைப் பொங்கல் விழா

டாப்சிலிப் வனப்பகுதியில் உற்சாகமாக நடைபெற்ற யானைப் பொங்கல் விழா கோவை அருகே அமைந்துள்ள...

ஈரானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை

ஈரானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை ஈரானில் நிலவி வரும் அரசியல் குழப்பம் மற்றும்...