• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, ஏப்ரல் 18, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Bharat

அசாதாரண சூழ்நிலையில் 670 கிலோமீட்டர் சாலைப் பயணம் – ஜெய்சங்கரின் அபூர்வ பயணக் கதை

athibantv by athibantv
ஜனவரி 10, 2026
in Bharat
0
📢 WhatsApp Channel Join
👁️ 860 📋

அசாதாரண சூழ்நிலையில் 670 கிலோமீட்டர் சாலைப் பயணம் – ஜெய்சங்கரின் அபூர்வ பயணக் கதை

அமெரிக்காவில் அரசு நிர்வாகம் நிதியின்மை காரணமாக செயலிழந்திருந்த நேரத்தில், நியூயார்க் சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கரின் பயணம், அபூர்வமான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த நேரத்தில் நடந்தது என்ன என்பதே தற்போது கவனம் பெற்றுள்ளது.

Related posts

“மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு” – சிக்கிம் பேரணி வீடியோவைப் பகிர்ந்து அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து!

“மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு” – சிக்கிம் பேரணி வீடியோவைப் பகிர்ந்து அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து!

ஏப்ரல் 18, 2026
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!

ஏப்ரல் 18, 2026

அமெரிக்காவில் அரசு முடக்கம், கடுமையான பனிப்பொழிவு, விமான சேவைகள் நிறுத்தம் என பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில், 670 கிலோமீட்டர் தூரத்தை காரில் பயணித்துள்ளார் ஜெய்சங்கர். அதுவும் மிக அரிதான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்தப் பயணம் நடைபெற்றதாக, Supervisory Special Agent காப்ரியல் மாசியாஸ் தெரிவித்துள்ளார்.

2025 டிசம்பர் 30 அன்று அவர் வெளியிட்ட கட்டுரையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் அசாதாரணமான பயண அனுபவமும், அதற்காக மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு திட்டங்களும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. டிரம்ப் நிர்வாக காலத்தில், பட்ஜெட் மசோதாக்கள் உரிய முறையில் நிறைவேறாததால், அமெரிக்க அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாத நிலை ஏற்பட்டது. அத்தியாவசிய சேவைகள் தவிர, பெரும்பாலான அரசு அமைப்புகள் செயல்பட முடியாத சூழ்நிலை நிலவியது.

நவம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஜி7 வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக கனடாவில் இருந்த ஜெய்சங்கர், அதன் பின்னர் நியூயார்க் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் கடுமையான குளிர் காலநிலை காரணமாக ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அவர் சாலை வழியாக நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்தப் பயணத்தை பாதுகாப்பாக நிறைவேற்ற “mission-defining challenge” என்ற சிறப்பு திட்டத்தை அமெரிக்க அதிகாரிகள் வகுத்தனர். ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் முக்கியமான ராஜதந்திர சந்திப்பு நடைபெற இருந்ததால், கனடா எல்லையில் உள்ள லூயிஸ்டன்–குயின்ஸ்டன் பாலத்தில் ஜெய்சங்கரை அமெரிக்க அதிகாரிகள் வரவேற்று, மன்ஹாட்டன் நோக்கி ஏழு மணி நேர பயணத்தை தொடங்கினர்.

இந்தப் பணிக்காக Diplomatic Security Service, நியூயார்க் பீல்ட் ஆபீஸ் மற்றும் பஃபலோ ரெசிடென்ட் ஆபீஸ் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் இணைந்து, துணிச்சலான மற்றும் துல்லியமான செயல் திட்டத்தை உருவாக்கினர்.

ஜெய்சங்கர் கவசம் கொண்ட வாகனத்தில் பயணிக்க, ஓட்டுநர்கள் மாறி மாறி வாகனத்தை இயக்கினர். தடையின்றி, இடைநிறுத்தம் இல்லாமல் பயணம் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பாதுகாப்பு குழு உறுதி செய்தது. 670 கிலோமீட்டர் முழுவதும் பாதுகாப்பு தொடர்ந்த நிலையில், இறுதியாக நியூயார்க் சென்றடைந்த ஜெய்சங்கர், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸை சந்தித்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

2025 அக்டோபர் 1 முதல் நவம்பர் 13 வரை, சுமார் 43 நாட்கள் அமெரிக்காவில் அரசு முடக்கம் நீடித்த சூழலில், ஜெய்சங்கரின் இந்தப் பயணத் திட்டம் மிகுந்த புத்திசாலித்தனத்துடனும், தைரியத்துடனும் செயல்படுத்தப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.

இந்தப் பயணம் மிகவும் சவாலானதாக இருந்த போதிலும், அந்த ஸ்பெஷல் ஏஜெண்ட் எழுதிய கட்டுரை குறித்தோ, அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கை குறித்தோ இந்திய அரசு தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதிலும் அளிக்கப்படவில்லை. அதனை உறுதிப்படுத்தவும் மறுக்கவும் இந்திய தரப்பு முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Bharat
Previous Post

மோடி ட்ரம்பை புறக்கணித்தாரா? – அமெரிக்க அமைச்சரின் தவறான குற்றச்சாட்டுக்கு இந்தியா விளக்கம்

Next Post

திமுக அரசு வாக்குறுதிகளை மறந்துவிட்டதாக மக்கள் நல பணியாளர்கள் குற்றம்சாட்டு

Next Post

திமுக அரசு வாக்குறுதிகளை மறந்துவிட்டதாக மக்கள் நல பணியாளர்கள் குற்றம்சாட்டு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு” – சிக்கிம் பேரணி வீடியோவைப் பகிர்ந்து அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து!

“மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு” – சிக்கிம் பேரணி வீடியோவைப் பகிர்ந்து அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து!

ஏப்ரல் 18, 2026
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!

ஏப்ரல் 18, 2026
உதகையில் பரபரப்பு: மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை!

உதகையில் பரபரப்பு: மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை!

ஏப்ரல் 18, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு” – சிக்கிம் பேரணி வீடியோவைப் பகிர்ந்து அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து!
  • மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!
  • உதகையில் பரபரப்பு: மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

“மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு” – சிக்கிம் பேரணி வீடியோவைப் பகிர்ந்து அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து!

“மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு” – சிக்கிம் பேரணி வீடியோவைப் பகிர்ந்து அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து!

ஏப்ரல் 18, 2026
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!

ஏப்ரல் 18, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN