• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வெள்ளிக்கிழமை, ஜூன் 5, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home World

அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸின் இல்லம் மீது தாக்குதல் – சம்பவத்தின் பின்னணி என்ன?

athibantv by athibantv
ஜனவரி 7, 2026
in World
0
📢 WhatsApp Channel Join
👁️ 872 📋

அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸின் இல்லம் மீது தாக்குதல் – சம்பவத்தின் பின்னணி என்ன?

அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸின் ஓஹியோ மாநில இல்லத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான பின்னணி விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

ஓஹியோ மாநிலம் சின்சினாட்டி நகரின் ஈஸ்ட் வால்நட் ஹில்ஸ் பகுதியில், வில்லியம் ஹோவர்ட் டாஃப்ட் டிரைவ் என்ற இடத்தில் ஜேடி வான்ஸின் குடியிருப்பு அமைந்துள்ளது. துணை அதிபர் வான்ஸும் அவரது மனைவி உஷாவும் இந்த வீட்டை 2018 ஆம் ஆண்டு சுமார் 12.63 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கியுள்ளனர்.

Related posts

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி: என்ஐஏ விசாரணையில் அதிரடி தகவல்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி: என்ஐஏ விசாரணையில் அதிரடி தகவல்!

ஜூன் 3, 2026
குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: மேற்காசியாவில் மீண்டும் கடும் பதற்றம்!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: மேற்காசியாவில் மீண்டும் கடும் பதற்றம்!

ஜூன் 3, 2026

கடந்த திங்கட்கிழமை, வான்ஸ் இல்லம் உள்ள பகுதிக்கு நோக்கி சந்தேகத்திற்கிடமான வகையில் ஓடிக்கொண்டிருந்த ஒருவரை கவனித்த அமெரிக்க ரகசிய சேவை அதிகாரி, உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். அதன்பின், வீட்டில் இருந்து கண்ணாடி உடையும் சத்தம் கேட்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ஒரு இளைஞர் சுத்தியலால் ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் நுழைய முயன்றதை கண்டனர்.

மேலும், துணை அதிபரின் இல்லத்துக்கு செல்லும் பாதையில் நிறுத்தப்பட்டிருந்த ரகசிய சேவை வாகனத்தையும் அந்த நபர் தாக்கியதாக தெரியவந்துள்ளது. தாக்குதல் நடந்த நேரத்தில் வீட்டில் வான்ஸின் குடும்பத்தினர் யாரும் இல்லாததால், பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அந்த நபர் வீட்டுக்குள் நுழைய முடியவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்துக்குப் பிறகு வெளியான புகைப்படங்களில், வான்ஸ் இல்லத்தில் உள்ள பல ஜன்னல்கள் உடைக்கப்பட்டிருப்பது தெளிவாக காணப்படுகிறது. ஒவ்வொரு ஜன்னலுக்கும் ஏற்பட்ட சேதம் சுமார் 25.28 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக சின்சினாட்டி அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 26 வயதுடைய வில்லியம் டிஃபூர் என்பவர் மீது, சொத்துச் சேதம், நாசவேலை, அரசு பணியைத் தடை செய்தல் மற்றும் அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சின்சினாட்டியில் பிறந்த டிஃபூர், பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் திருநங்கையாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. கடந்த மாதம் ‘ஜூலியா’ என்ற பெயரில் அவர் சமூக வலைதள கணக்கொன்றை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த கணக்கில் உள்ள விவரங்களின்படி, டிஃபூர் 2018 ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளி கல்வியை முடித்துள்ளார். பின்னர் சின்சினாட்டி பல்கலைக்கழகத்தின் இசைக் கல்லூரி பாதுகாப்பகப் பிரிவில் பயின்ற அவர், படிப்பை இடைநிறுத்தி, கடந்த ஆண்டு சின்சினாட்டி ஸ்டேட் தொழில்நுட்ப மற்றும் சமூகக் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

ஓஹியோ மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளராக உள்ள டிஃபூர், எந்த அரசியல் கட்சியை ஆதரிக்கிறார் என்பது இதுவரை தெளிவாகவில்லை. அவரது தந்தை வில்லியம் ஒரு பிரபல அறுவை சிகிச்சை மருத்துவராகவும், தாய் கேத்தரின் புகழ்பெற்ற குழந்தை மருத்துவராகவும் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஜனநாயகக் கட்சியை ஆதரிக்கும் டிஃபூரின் தந்தை, கமலா ஹாரிஸின் தேர்தல் பிரச்சாரத்துக்கு 11,600 டாலருக்கும் அதிகமாக நன்கொடை வழங்கியுள்ளதாகவும், 2020 ஆம் ஆண்டு ஜோ பைடனின் அதிபர் தேர்தல் பிரச்சாரத்திற்கும் கணிசமான தொகை அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு முன்பு, 2023 ஆம் ஆண்டு அமெரிக்க சுகாதார மனநல அவசர சேவை மையத்தில் அத்துமீறி நுழைந்த வழக்கில், டிஃபூர் 10,000 டாலர் பிணையில் வெளியே இருந்துள்ளார். அந்த வழக்கில், விசாரணைக்கு தகுதியற்ற மனநல நிலை என நீதிபதி கருதி, குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்துள்ளார்.

அதேபோல், கடந்த ஆண்டு ஹைட் பார்க்கில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் ஜன்னல்கள் உடைக்கப்பட்ட சம்பவத்திலும் டிஃபூர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கும் மனநலப் பிரிவு விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல் தொடர்பாக அக்கறை காட்டிய அனைவருக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த ரகசிய சேவை மற்றும் சின்சினாட்டி காவல்துறைக்கும் நன்றி தெரிவித்துள்ள துணை அதிபர் ஜேடி வான்ஸ், வீட்டின் உடைந்த ஜன்னல்களின் புகைப்படங்களை வெளியிட்டு செய்தி வெளியிட்ட ஊடகங்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதற்கிடையே, இந்த சம்பவம் துணை அதிபரின் குடும்பத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலா என்ற கோணத்திலும் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: World
Previous Post

தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழா – ஆயிரக்கணக்கான இசைக்கலைஞர்கள் இசை மரியாதை

Next Post

மாணவர் சேர்க்கையில் பாகுபாடு குற்றச்சாட்டு – ஜம்முவில் உள்ள மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து

Next Post

மாணவர் சேர்க்கையில் பாகுபாடு குற்றச்சாட்டு – ஜம்முவில் உள்ள மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“புதிய அரசியல், புதிய பாதை, புதிய இயக்கம்!” – பாஜகவிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகி அண்ணாமலை அதிரடி பிரகடனம்!

“புதிய அரசியல், புதிய பாதை, புதிய இயக்கம்!” – பாஜகவிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகி அண்ணாமலை அதிரடி பிரகடனம்!

ஜூன் 5, 2026
டாஸ்மாக் பார் உரிமம்: புதிய டெண்டர் விதிமுறைகளை உருவாக்கத் தமிழக அரசு அதிரடி முடிவு!

டாஸ்மாக் பார் உரிமம்: புதிய டெண்டர் விதிமுறைகளை உருவாக்கத் தமிழக அரசு அதிரடி முடிவு!

ஜூன் 5, 2026
டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து பாரதியார் புத்தகத்தை பரிசளித்த அண்ணாமலை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு டெல்லி தலைமை அவசர அழைப்பு!

பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அண்ணாமலை விலகல்: ராஜினாமாவை ஏற்றது டெல்லி தலைமை!

ஜூன் 5, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “புதிய அரசியல், புதிய பாதை, புதிய இயக்கம்!” – பாஜகவிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகி அண்ணாமலை அதிரடி பிரகடனம்!
  • டாஸ்மாக் பார் உரிமம்: புதிய டெண்டர் விதிமுறைகளை உருவாக்கத் தமிழக அரசு அதிரடி முடிவு!
  • பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அண்ணாமலை விலகல்: ராஜினாமாவை ஏற்றது டெல்லி தலைமை!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

“புதிய அரசியல், புதிய பாதை, புதிய இயக்கம்!” – பாஜகவிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகி அண்ணாமலை அதிரடி பிரகடனம்!

“புதிய அரசியல், புதிய பாதை, புதிய இயக்கம்!” – பாஜகவிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகி அண்ணாமலை அதிரடி பிரகடனம்!

ஜூன் 5, 2026
டாஸ்மாக் பார் உரிமம்: புதிய டெண்டர் விதிமுறைகளை உருவாக்கத் தமிழக அரசு அதிரடி முடிவு!

டாஸ்மாக் பார் உரிமம்: புதிய டெண்டர் விதிமுறைகளை உருவாக்கத் தமிழக அரசு அதிரடி முடிவு!

ஜூன் 5, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN