போரூரில் மனைவி கொலை – கணவர் கைது

Date:

போரூரில் மனைவி கொலை – கணவர் கைது

சென்னை போரூர் பகுதியில், மனைவியை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாகக் கூறப்படும் கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

போரூரைச் சேர்ந்த சத்யராஜ் என்பவருக்கு, தனது மனைவி ரோஸ்மேரியின் நடத்தை குறித்து சந்தேகம் இருந்து வந்ததாகவும், இதன் காரணமாக அடிக்கடி தம்பதிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், மதுபோதையில் இருந்த சத்யராஜ், மனைவியுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், வீட்டில் இருந்த கயிற்றைப் பயன்படுத்தி ரோஸ்மேரியின் கழுத்தை இறுக்கியும், அவரது தலையை சுவரில் மோதியுமாக கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த ரோஸ்மேரியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த சத்யராஜை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்தியாவில் ரூ.668 கோடி வருவாய் ஈட்டிய ‘துரந்தர்’ திரைப்படம்!

இந்தியாவில் ரூ.668 கோடி வருவாய் ஈட்டிய ‘துரந்தர்’ திரைப்படம்! நடிகர் ரன்வீர் சிங்...

நாட்டின் பாதுகாப்பில் எந்தவித譲ப்பும் இல்லை என்பதை இன்றைய இந்தியா உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது : பிரதமர் மோடி

நாட்டின் பாதுகாப்பில் எந்தவித譲ப்பும் இல்லை என்பதை இன்றைய இந்தியா உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது...

போதைப் பழக்க ஒழிப்பை வலியுறுத்தும் மாரத்தான் ஓட்டப் போட்டி!

போதைப் பழக்க ஒழிப்பை வலியுறுத்தும் மாரத்தான் ஓட்டப் போட்டி! ராணிப்பேட்டை பகுதியில் போதைப்பொருள்...

வியட்நாம் எல்லைப் பகுதிகளில் ரோபோக்களை பணியமர்த்தும் சீனா?

வியட்நாம் எல்லைப் பகுதிகளில் ரோபோக்களை பணியமர்த்தும் சீனா? வியட்நாமுடன் பகிர்ந்து கொள்ளும் எல்லைப்...