திருப்பரங்குன்றம் : செய்தி திரட்ட சென்ற செய்தியாளர் மீது காவல் துறை அத்து மீறல் – பரபரப்பு

Date:

திருப்பரங்குன்றம் : செய்தி திரட்ட சென்ற செய்தியாளர் மீது காவல் துறை அத்து மீறல் – பரபரப்பு

திருப்பரங்குன்றம் பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற ஒரு பத்திரிகையாளரிடம் காவல்துறை அத்துமீறியதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பகுதியில் செய்தி பணியில் ஈடுபடும் பத்திரிகையாளர்களை காவல்துறையினர் தொடர்ந்து தடுத்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. நேற்று, மலைப்பகுதிக்கு இஸ்லாமியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து சில பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த நிகழ்வை பதிவு செய்ய முயன்ற செய்தியாளர்களிடம், “உங்களால்தான் பிரச்சனை ஏற்படுகிறது” என்று ஒரு தரப்புக்கு சாதகமாக திருப்பரங்குன்றம் கோயில் ஆய்வாளர் ராஜசேகர் பேசியதாகவும், அது சர்ச்சையை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று காலை திருப்பரங்குன்றம் பள்ளிவாசல் அருகே ஒரு பத்திரிகையாளர் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த காவலர்கள் அவரது செல்போனை பறித்து, அதிலிருந்த காட்சிகளை அழித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, காவல்துறையினருக்கும் அந்த செய்தியாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வங்கதேசத்தில் தீவிரமடையும் கலவரம் – நாடாளுமன்றம் நோக்கி முன்னேறிய போராட்டக்காரர்கள்

வங்கதேசத்தில் தீவிரமடையும் கலவரம் – நாடாளுமன்றம் நோக்கி முன்னேறிய போராட்டக்காரர்கள் வங்கதேசத்தில் தொடர்ச்சியாக...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் : வைகுண்ட ஏகாதசி 2ஆம் நாள் விழா கோலாகலம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் : வைகுண்ட ஏகாதசி 2ஆம் நாள் விழா...

இந்துப் பண்டிகைகளுக்கு முதல்வரின் வாழ்த்து எங்கே? – தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி

இந்துப் பண்டிகைகளுக்கு முதல்வரின் வாழ்த்து எங்கே? – தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி பாஜகவை...

இந்தியாவுக்கு எதிரான சதியில் ஈடுபடுவோருடன் ராகுல் காந்தி தொடர்பு – பாஜக குற்றச்சாட்டு

இந்தியாவுக்கு எதிரான சதியில் ஈடுபடுவோருடன் ராகுல் காந்தி தொடர்பு – பாஜக...