• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, மே 13, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home World

இம்ரான் கான் மீது மனிதாபிமானமற்ற சித்திரவதை – மகன்களின் கடும் குற்றச்சாட்டுகள் புதிய சர்ச்சையை உருவாக்கின

athibantv by athibantv
டிசம்பர் 19, 2025
in World
0
📢 WhatsApp Channel Join
👁️ 4.6K 🔥 📋

இம்ரான் கான் மீது மனிதாபிமானமற்ற சித்திரவதை – மகன்களின் கடும் குற்றச்சாட்டுகள் புதிய சர்ச்சையை உருவாக்கின

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் மனிதாபிமானம் அற்ற வகையில் உளவியல் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக, அவரது மகன்கள் காசிம் கான் மற்றும் சுலைமான் இஸா கான் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள இந்த விவகாரம் குறித்த விரிவான தகவல்களை இச்செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

Related posts

சுற்றுச்சூழல் பேரழிவு: சேமிக்க முடியாத கச்சா எண்ணெய்யைக் கடலில் கொட்டும் ஈரான்? செயற்கைக்கோள் படங்கள் அதிர்ச்சி!

சுற்றுச்சூழல் பேரழிவு: சேமிக்க முடியாத கச்சா எண்ணெய்யைக் கடலில் கொட்டும் ஈரான்? செயற்கைக்கோள் படங்கள் அதிர்ச்சி!

மே 11, 2026

டிரம்பின் 10% உலகளாவிய வரி விதிப்பு “சட்டவிரோதம்” – அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

மே 8, 2026

2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக இருந்த இம்ரான் கான், தனது ஆட்சி காலத்தில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கினார். பின்னர், நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததன் காரணமாக அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அரசியல் எதிரிகள் மற்றும் ராணுவ அமைப்பை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு ஊழல் வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார்.

‘அல்-காதிர் டிரஸ்ட்’ எனப்படும் நிதி முறைகேடு வழக்கில், இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனிடையே, ஏழு மாதங்களுக்கும் மேலாக குடும்பத்தாருடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்த அவர், சிறைக்குள் கொல்லப்பட்டதாக தகவல்கள் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்த வதந்திகள் அவரது குடும்பத்தினரிடமும், தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியினரிடமும் கடும் பதற்றத்தை உருவாக்கின. இதனைத் தொடர்ந்து, அவரை நேரில் சந்திக்க குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு அனுமதி வழங்கியது.

அதன்படி, இம்ரான் கானின் சகோதரி உஸ்மா கான் சிறைக்குச் சென்று அவரை சந்தித்தார். பின்னர் ஊடகங்களிடம் பேசிய அவர், இம்ரான் கான் உயிருடன் இருப்பதாகவும், ஆனால் அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இந்த நிலையில், இம்ரான் கானின் சிறை நிலை குறித்து அவரது மகன்கள் தீவிர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். லண்டனில் வசித்து வரும் அவரது முன்னாள் மனைவி ஜெமிமா கோல்ட்ஸ்மித்தின் மகன்களான காசிம் கான் மற்றும் சுலைமான் இஸா கான், கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்கள் தந்தை முழுமையான தனிமைச் சிறையில் வைக்கப்பட்டு உளவியல் ரீதியான அழுத்தங்களுக்கு ஆளாக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ராவல்பிண்டியில் உள்ள ஆடியாலா சிறையில் இம்ரான் கான் மனிதாபிமானமற்ற முறையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.

காசிம் கான் பேசுகையில், ஹெபடைட்டிஸ் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்ட கைதிகளுடன் தங்கள் தந்தை வைக்கப்பட்டுள்ளதாகவும், குடிக்கத் தகாத அசுத்தமான தண்ணீரே அவருக்கு வழங்கப்படுவதாகவும் கூறினார். இதனால் தந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் கவலை தெரிவித்தார். மேலும், வரும் ஜனவரி மாதம் பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான விசா விண்ணப்பம் இன்னும் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்தார். சுலைமான் இஸா கானும், தந்தை மனித தொடர்புகளிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

சிறை ஊழியர்களே கூட அவருடன் பேச அனுமதிக்கப்படாத நிலை உள்ளதாகவும், சில நேரங்களில் அவரது தனிமைச் சிறைக்கு மின்சாரம் கூட துண்டிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு முற்றிலும் எதிரானவை என்றும் அவர் வலியுறுத்தினார். இதேபோல், ஐக்கிய நாடுகள் சபை அதிகாரி ஒருவரும் நீண்டகால தனிமைச் சிறை தண்டனை மனித உரிமை விதிகளுக்கு முரணானது என பாகிஸ்தான் அரசை எச்சரித்துள்ளார்.

ஆனால், பாகிஸ்தான் அரசுத் தரப்பில் இதனை மறுக்கும் குரலும் எழுந்துள்ளது. பாகிஸ்தான் பிரதிநிதி முஷரஃப் சயீதி, இம்ரான் கானின் மகன்கள் கூறிய குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ளார். கடந்த 860 நாட்களாக சிறையில் உள்ள இம்ரான் கானுக்கு வாரத்திற்கு ஒருமுறை குடும்ப சந்திப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை சுமார் 870 முறை சந்திப்புகள் நடைபெற்றுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

இதனால், இம்ரான் கானின் உண்மையான சிறை நிலை குறித்து குழப்பம் நீடித்து வரும் நிலையில், அவரது உடல்நலம், பாதுகாப்பு மற்றும் அடிப்படை மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை சர்வதேச அளவில் வலுப்பெற்று வருகிறது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: World
Previous Post

கிருஷ்ணகிரி அருகே தனியார் பேருந்து மீது நாட்டு வெடிகுண்டு தாக்குதல் – மூவர் கைது

Next Post

பிரதமர் நரேந்திர மோடியை கௌரவித்த உலக நாடுகள் – சர்வதேச விருதுகளின் முழுப் பட்டியல்

Next Post

பிரதமர் நரேந்திர மோடியை கௌரவித்த உலக நாடுகள் – சர்வதேச விருதுகளின் முழுப் பட்டியல்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானுக்கு உதவிய சீனா – இந்தியா கடும் கண்டனம்!

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானுக்கு உதவிய சீனா – இந்தியா கடும் கண்டனம்!

மே 13, 2026
“ஆட்சிக்கு வருவதற்கு முன்பே குதிரை பேரம்” – சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு!

“ஆட்சிக்கு வருவதற்கு முன்பே குதிரை பேரம்” – சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு!

மே 13, 2026
அரசியல் நாகரிகம்: மு.க.ஸ்டாலின் முதல் சீமான் வரை – தலைவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதலமைச்சர் விஜய்!

“திமுக வாக்கு வங்கி 10 சதவீதத்திற்கும் கீழ் சரிந்துவிட்டது” – உதயநிதிக்கு முதல்வர் விஜய் அதிரடி பதிலடி!

மே 13, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானுக்கு உதவிய சீனா – இந்தியா கடும் கண்டனம்!
  • “ஆட்சிக்கு வருவதற்கு முன்பே குதிரை பேரம்” – சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு!
  • “திமுக வாக்கு வங்கி 10 சதவீதத்திற்கும் கீழ் சரிந்துவிட்டது” – உதயநிதிக்கு முதல்வர் விஜய் அதிரடி பதிலடி!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானுக்கு உதவிய சீனா – இந்தியா கடும் கண்டனம்!

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானுக்கு உதவிய சீனா – இந்தியா கடும் கண்டனம்!

மே 13, 2026
“ஆட்சிக்கு வருவதற்கு முன்பே குதிரை பேரம்” – சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு!

“ஆட்சிக்கு வருவதற்கு முன்பே குதிரை பேரம்” – சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு!

மே 13, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN