தேர்தல் பலனுக்காக டிஜிபி நியமனத்தை தாமதப்படுத்துகிறாரா முதல்வர்? – பழனிசாமி குற்றச்சாட்டு

Date:

தேர்தல் பலனுக்காக டிஜிபி நியமனத்தை தாமதப்படுத்துகிறாரா முதல்வர்? – பழனிசாமி குற்றச்சாட்டு

முழுநேர டிஜிபி நியமனத்தை தேர்தல் ஆதாயத்துக்காக தாமதப்படுத்தி, மக்களின் பாதுகாப்போடு முதல்வர் ஸ்டாலின் விளையாடி வருகிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

“தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு துறை டிஜிபியின் பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் மாதத்திலேயே முடிவடைந்தது. இந்நிலையில், தேர்தல் காலத்தில் தமக்கு சாதகமான அதிகாரியை தேர்வு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், மாநில மக்களின் பாதுகாப்பை புறக்கணித்து, முழுநேர டிஜிபி நியமனத்தை முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு இழுத்தடிக்கிறார்.

புதிய டிஜிபிக்கான மூன்று பெயர்களை உள்ளடக்கிய இறுதி உத்தேசப் பட்டியலை யூபிஎஸ்சி ஏற்கனவே அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படியிருக்க, அந்த மூவரில் ஒருவரை நியமிக்க முதல்வருக்கும் திமுக அரசுக்கும் என்ன சிக்கல்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “இந்நிலையில் காவல்துறையினர் வீரவணக்க நாளில் மட்டும் புகைப்படம் எடுக்க ஆர்வமாக கலந்துகொள்வது வேடிக்கையாக உள்ளது. அவர்கள் அணியும் கருப்பு பட்டைக்கு ரத்தக் கொதிப்புதானா காரணம் என்று சட்டப்பேரவைத் தலைவர் கேட்பாரா? அல்லது அதைக் ‘சிறைக்கைதி சீருடை’ என்று அமைச்சர் ரகுபதி கூறுவாரா?” என பழனிசாமி விமர்சித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிரதமர் மோடியுடன் வர்த்தக பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்

பிரதமர் மோடியுடன் வர்த்தக பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு...

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடக்கம் – தினசரி மின்தேவை 11 ஆயிரம் மெகாவாட்டாக குறைவு

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடக்கம் – தினசரி மின்தேவை 11 ஆயிரம்...

பிரசவ தேதி நெருங்கும் கர்ப்பிணிகளை அரசு மருத்துவமனைகளில் சேர்க்க சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவு

பிரசவ தேதி நெருங்கும் கர்ப்பிணிகளை அரசு மருத்துவமனைகளில் சேர்க்க சுகாதாரத்துறை இயக்குநர்...

வடபழனி முருகன் கோயிலில் மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை இன்று தொடக்கம்

வடபழனி முருகன் கோயிலில் மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை இன்று தொடக்கம் சென்னை...