திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் ரூ.3.81 கோடி உண்டியல் வருவாய்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் மூலம் ரூ.3.81 கோடி ரொக்கத் தொகையும், 1.13 கிலோ தங்கமும் காணிக்கையாகச் சேர்க்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பிரசித்தி பெற்ற இந்தத் திருக்கோயிலில், தக்கார் அருள்முருகன் தலைமையில் உண்டியல் எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதில், கடந்த நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், ரூ.3.81 கோடி பணம், 1.13 கிலோ தங்கம் மற்றும் 815 வெளிநாட்டு நாணய நோட்டுகள் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளன என்று கோயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.