டிஜிட்டல் கைது நாடகம்: ஓய்வுபெற்ற ஐஐடி விஞ்ஞானியிடம் ரூ.57 லட்சம் சைபர் மோசடி

Date:

டிஜிட்டல் கைது நாடகம்: ஓய்வுபெற்ற ஐஐடி விஞ்ஞானியிடம் ரூ.57 லட்சம் சைபர் மோசடி

ஓய்வுபெற்ற ஐஐடி விஞ்ஞானியை குறிவைத்து ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற பெயரில் ரூ.57 லட்சம் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

சென்னை ஐஐடியில் முன்னதாகப் பணியாற்றியவரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான ராமசாமி, தற்போது ஐஐடியின் சிஎல்ஆர்ஐ கல்வி நிறுவனத்தில் சிறப்பு பேராசிரியராக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு அவரது கைப்பேசிக்கு அழைத்த மர்ம நபர்கள், வட இந்தியாவில் நடந்த ஒரு குற்றச் சம்பவத்தில் அவரது மொபைல் எண் தொடர்புடையதாக இருப்பதாகவும், இதன் அடிப்படையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி அச்சுறுத்தியுள்ளனர்.

விசாரணை ஆன்லைன் வழியாக நடைபெறும் என கூறி, அவரை மெய்நிகர் முறையில் ‘கைது’ செய்ததாக நம்பவைத்து, அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.57 லட்சத்தை சட்டவிரோதமாக மாற்றி மோசடி செய்துள்ளனர்.

இதுகுறித்து ராமசாமி அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் நடந்ததிலிருந்து கடந்த மூன்று மாதங்களாக எந்தத் தீர்மானமான தடயமும் கிடைக்காத நிலையில், இதே முறையில் மோசடியில் ஈடுபட்டுள்ள வடமாநில சைபர் குற்றவாளிகள் குறித்த தகவல்களை திரட்டி, அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

90ஸ் கிட்ஸ்களின் ஐகான் ஜான் சீனா – WWE ரிங்குக்கு விடை

90ஸ் கிட்ஸ்களின் ஐகான் ஜான் சீனா – WWE ரிங்குக்கு விடை மல்யுத்த...

புத்துயிர் பெறுமா சிங்காநல்லூர் ரயில் நிலையம்? – பாதுகாப்பற்ற நிலை பயணிகளை அச்சுறுத்துகிறது

புத்துயிர் பெறுமா சிங்காநல்லூர் ரயில் நிலையம்? – பாதுகாப்பற்ற நிலை பயணிகளை...

மயானப் பணியில் சமூக நல்லிணக்கம் – பட்டதாரி இளைஞரின் போராட்ட வாழ்க்கை

மயானப் பணியில் சமூக நல்லிணக்கம் – பட்டதாரி இளைஞரின் போராட்ட வாழ்க்கை சிவகங்கை...