கோயில் நிலம் மீட்பு
அறநிலையத்துறை ஆணையர் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
திருப்பத்தூர் மாவட்டம் பேராம்பட்டில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்கத் தவறியதற்கு விளக்கம் அளிக்க, அறநிலையத்துறை ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு கோயில் நிலங்களை மீட்க அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதுவரை அந்த உத்தரவு நிறைவேற்றப்படாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு,
- அறநிலையத்துறை ஆணையர்
- இணை ஆணையர் உள்ளிட்ட நான்கு அதிகாரிகள்
ஜனவரி 12ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.