கொப்பரைத் தேங்காய் ஆதார விலை உயர்வு – பிரதமருக்கு பாஜக மாநில தலைவர் பாராட்டு

Date:

கொப்பரைத் தேங்காய் ஆதார விலை உயர்வு – பிரதமருக்கு பாஜக மாநில தலைவர் பாராட்டு

கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தியதற்கு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மில்லிங் கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ₹445 ஆகவும், பால் கொப்பரைக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ₹400 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த முடிவு, வெள்ளை ஈ தாக்குதல் மற்றும் வாடல் நோய் போன்ற பிரச்சினைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் தென்னை விவசாயிகளுக்கு பெரும் நிவாரணமாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் கொப்பரைத் தேங்காய்க்கான ஆதார விலையை உயர்த்திய பிரதமர் மோடிக்கு, தமிழக தென்னை விவசாயிகள் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதாக நயினார் நாகேந்திரன் தனது பதிவில் கூறியுள்ளார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

புதுச்சேரி: பிரதமர் வருகையை ஒட்டி லாஸ்பேட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு – ட்ரோன்களுக்குத் தடை!

புதுச்சேரி: பிரதமர் வருகையை ஒட்டி லாஸ்பேட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு -...

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: மத்திய கிழக்கில் வெடித்தது முழு அளவிலான போர்!

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: மத்திய கிழக்கில்...

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில், ஈரான் நாட்டின் ராணுவ பலம் குறித்த விரிவான தகவல்கள்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில்,...

அம்பத்தூர்: அம்பேத்கர் நலச்சங்க பெயர் பலகை சேதம் – மர்ம நபர்களின் அட்டூழியம்!

அம்பத்தூர்: அம்பேத்கர் நலச்சங்க பெயர் பலகை சேதம் - மர்ம நபர்களின்...