திமுக ஆட்சியில் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அளித்த முக்கியத்துவம் என்ன? – மரகதம் மீனாட்சி கேள்வி

Date:

திமுக ஆட்சியில் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அளித்த முக்கியத்துவம் என்ன? – மரகதம் மீனாட்சி கேள்வி

திமுக மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரத்தில் இருந்த காலகட்டங்களில் எத்தனை சுதந்திர போராட்ட வீரர்களுக்கு உரிய மரியாதையும் முக்கியத்துவமும் வழங்கப்பட்டது என்று வ.உ.சி.யின் பேத்தி மரகதம் மீனாட்சி கேள்வி எழுப்பியுள்ளார்.

மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா, தமிழகத்தில் வடமாநில சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்களில் சாலைகள், மருத்துவமனைகள் உள்ளிட்டவை உள்ளதாகவும், அதேபோல் வட இந்தியாவில் வ.உ.சி. உள்ளிட்ட தமிழ்ச் சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்களில் சாலைகள் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், பொள்ளாச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய மரகதம் மீனாட்சி, தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புகளை பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளில் எடுத்துரைத்து வருவதாகவும், அதனை உணராமல் தமிழக அரசு தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகவும் விமர்சனம் செய்தார்.

மேலும், திமுக மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோது, எத்தனை சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறுகள் பள்ளிப் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன என்பதை விளக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதே நேரத்தில், ‘வந்தே மாதரம்’ குறித்த சிறப்பு விவாதத்தின் போது பிரதமர் மோடி வ.உ.சி. மற்றும் மகாகவி பாரதியார் குறித்து குறிப்பிட்டுப் பேசியதற்கு மரகதம் மீனாட்சி நன்றியை தெரிவித்தார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தோல்வி உறுதி என்றாலும் நீதித்துறையின் மரியாதையை சவால் செய்கிறது திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு

தோல்வி உறுதி என்றாலும் நீதித்துறையின் மரியாதையை சவால் செய்கிறது திமுக :...

மெரினா அருகே போராட்டம்: தூய்மை பணியாளர்கள் போலீசாரால் கைது

மெரினா அருகே போராட்டம்: தூய்மை பணியாளர்கள் போலீசாரால் கைது சென்னை மெரினா கடற்கரை...

இந்திய மண்ணில் காலடி வைத்த உலக கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி

இந்திய மண்ணில் காலடி வைத்த உலக கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி உலகப் புகழ்பெற்ற...

நீண்ட நேரக் காத்திருப்பு – புதினை சந்திக்க 40 நிமிடங்கள் எதிர்பார்த்த பாகிஸ்தான் பிரதமர்

நீண்ட நேரக் காத்திருப்பு – புதினை சந்திக்க 40 நிமிடங்கள் எதிர்பார்த்த...