தூய்மைப் பணியாளர்கள் முதல் செவிலியர்கள் வரை: அதிர்ச்சி தரும் விடியோ — மாநில அரசு மீது நயினார் நாகேந்திரன் விமர்சனம்

Date:

தூய்மைப் பணியாளர்கள் முதல் செவிலியர்கள் வரை: அதிர்ச்சி தரும் விடியோ — மாநில அரசு மீது நயினார் நாகேந்திரன் விமர்சனம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில், தலையில் ரத்தக் காயங்களுடன் வந்த பெண்மணிக்கு — செவிலியர்கள் இல்லாததால் — தூய்மைப் பணியாளர் ஒருவர் முதலுதவி செய்த சம்பவத்தின் காணொளி பரவி வருகிறது. இந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக தமிழக பாஜகத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த நான்கு ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக குற்றம் சாட்டினார். குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளும் இல்லாத நிலை, மருத்துவர் பற்றாக்குறை, அவசிய மருந்துகள் மற்றும் தரமான ஸ்கேன் வசதிகள் இல்லாமை ஆகியவை பொதுமக்களை பெரிதும் பாதிக்கின்றன என்றும் கூறினார்.

“மழை பெய்தால் கூரை ஒழுகுகிறது, நோயாளிகளின் படுக்கைகளில் தெருநாய் தூங்குகிறது, டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை செய்யப்படுகிறது. தூய்மைப் பணியாளர்களே சிகிச்சை அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதை விட மாநிலத்தின் சுகாதார துறையின் வீழ்ச்சிக்கான இன்னும் என்ன சான்று வேண்டும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செயல்பாட்டை விமர்சித்த அவர், “ஐந்தறிவு உள்ள அணிலுக்குக் கூட பாவம் பார்த்து காப்பார்; ஆனால் பொதுமக்கள் படும் அவலங்களை அமைச்சர் காணவில்லையா?” எனக் கேட்டார்.

“சிதைந்து போன மருத்துவ அமைப்பை மறைத்து வைத்து ‘திராவிட மாடல் உலகம் போற்றுகிறது’ என பெருமை பேசும் திமுக தலைவர்களும் ஆதரவாளர்களும், தங்களுக்கு காயம் ஏற்பட்டால் அரசு மருத்துவமனைக்கே வருவார்களா?” என்று நயினார் நாகேந்திரன் சாடி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

திருப்பரங்குன்றத் தீபத்தூண் விவகாரத்தில் திமுக பரப்பிய தகவல்கள் தவறானது: தொல்லியல் துறை நூல் வெளிச்சம்

திருப்பரங்குன்றத் தீபத்தூண் விவகாரத்தில் திமுக பரப்பிய தகவல்கள் தவறானது: தொல்லியல் துறை...

உரிமை கோரப்படாத ரூ.2,000 கோடி — உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது: பிரதமர் மோடி

உரிமை கோரப்படாத ரூ.2,000 கோடி — உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது: பிரதமர் மோடி நாடு...

இலங்கை: கனமழை, வெள்ளம்– உயிரிழப்பு 620-ஐ கடந்தது

இலங்கை: கனமழை, வெள்ளம்– உயிரிழப்பு 620-ஐ கடந்தது இலங்கையில் தொடர்ச்சியாக பெய்த கனமழை,...

யுனெஸ்கோ பட்டியலில் தீபாவளி — பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி

யுனெஸ்கோ பட்டியலில் தீபாவளி — பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி யுனெஸ்கோவின்...