சென்னை: கார் துரத்திச் சென்ற போக்குவரத்து காவலர் விபத்தில் உயிரிழப்பு – ஓட்டுநர் கைது
சென்னை மடிப்பாக்கம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர், தப்பிச் சென்ற காரை துரத்திச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.
மடிப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த மேகநாதன், பள்ளிக்கரணை கைவெலி பகுதியில் வாகனங்களைச் சோதித்து வரும்போது, வேகமாக வந்த ஒரு காரை நிறுத்த முயன்றார். ஆனால் கார் ஓட்டுநர் நிற்காமல் தப்பிச் சென்றார்.
இதையடுத்து மேகநாதன் தனது இருசக்கர வாகனத்தில் காரை துரத்திச் சென்றார். பள்ளிக்கரணை மேம்பாலம் பகுதியில் காரை மடக்க முயன்றபோது, அவர் தவறி விழுந்து, காரின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவத்துக்குப் பின்னர் தப்பிச் சென்ற ஓட்டுநர் சாய்ராம்–ஐ, போலீசார் மூன்று மணிநேரத்திலேயே கைது செய்து, சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.