தமிழகத்தில் ஆன்மிக விரோத அணுகுமுறை கொண்ட அரசு இருக்கக்கூடாது – நயினார் நாகேந்திரன் விமர்சனம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்,
“நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தாலும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் நிகழ்வு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது; இதற்கு காரணம் ஆன்மீகத்துக்கு விரோதமான திமுக ஆட்சி” என கடுமையாக குற்றம் சாட்டினார்.
அவர் மேலும் கூறியதாவது:
- இந்தியா உலக வல்லரசாக உயர்ந்து நிற்க இன்று பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட முயற்சிகள்தான் காரணம்.
- தமிழக அரசின் 17 அமைச்சர்களை ஊழல் குற்றச்சாட்டுகள் சூழ்ந்துள்ளன.
- மாணவர்கள் முதல் பலரிடமும் கஞ்சா பழக்கத்தின் பரவல் அதிகரித்து வருவது கவலைக்குரியது.
- மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கு தங்களது பெயர் ஸ்டிக்கராக ஒட்டும் அரசாக திமுக செயல்படுகிறது.
திருப்பரங்குன்றம் குறித்து அவர் மீண்டும் வலியுறுத்தியதாவது:
“நீதிமன்றமே தீபம் ஏற்றலாம் என்று தெளிவாக கூறிய பின்னும் அரசு அனுமதி வழங்காதது, திமுக அரசு ஆன்மிகத்திற்கு எதிரானது என்பதை நிரூபிக்கிறது” என்று தெரிவித்தார்.