வீட்டுக்குள் தீப்பற்றி சிதறிய ஃபிரிட்ஜ்!

Date:

வீட்டுக்குள் தீப்பற்றி சிதறிய ஃபிரிட்ஜ்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் உள்ள ஓர் இல்லத்தில், குளிர்சாதன பெட்டி திடீரென வெடித்து எரிந்ததால், சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமானது.

மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த காளியம்மாள், கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்றியிருந்தார். அதே நேரத்தில், ஃபிரிட்ஜின் மீது சில மெழுகுவர்த்திகளையும் வைத்து விட்டு அங்கிருந்து விலகியுள்ளார்.

சற்று நேரத்தில், அந்த குளிர்சாதன பெட்டி தீப்பற்றிக் கொண்டு முழுவதுமாக எரிந்ததுடன், வெடித்து துண்டு துண்டாகப் பிளந்தது. இதைக் கண்டு பதற்றமடைந்த காளியம்மாள் உடனடியாக தீயணைப்பு படையை தொடர்பு கொண்டார்.

அதனைத் தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மின்சாரத்தை நிறுத்தி, மளமளவெனப் பரவிய தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.

சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டின் உள்ளே இருந்த 2 லட்ச ரூபாய் மதிப்பிலான பல பொருட்கள் முற்றிலும் கருகியிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

55 மாதங்கள் கழித்து லேப்டாப் விநியோகம்: ஏன் இத்தனை தாமதம்? நயினார் நாகேந்திரன்

55 மாதங்கள் கழித்து லேப்டாப் விநியோகம்: ஏன் இத்தனை தாமதம்? தமிழகத்தில் ஆட்சி...

பிரிட்டனில் இருந்து வெளியேறும் வெளிநாட்டு குடியிருப்பாளர்கள் : இந்தியர்கள் அதிகம்!

பிரிட்டனில் இருந்து வெளியேறும் வெளிநாட்டு குடியிருப்பாளர்கள் : இந்தியர்கள் அதிகம்! இங்கிலாந்தை விட்டு...

மசூதி நிர்மாணத்திற்கு எதிராகக் கவிதை வாசித்த சிறுமிக்கு போலீசார் சம்மன்!

மசூதி நிர்மாணத்திற்கு எதிராகக் கவிதை வாசித்த சிறுமிக்கு போலீசார் சம்மன்! ரஷ்யாவில் மசூதி...

கொடி நாள் நன்கொடை வழங்க அனைவருக்கும் ஆளுநர் ஆர்.என். ரவி வேண்டுகோள்

கொடி நாள் நன்கொடை வழங்க அனைவருக்கும் ஆளுநர் ஆர்.என். ரவி வேண்டுகோள் கொடி...