விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு தருமபுரம் ஆதீனம் பாராட்டு
மயிலாடுதுறையில் உள்ள குருஞானசம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் மாணவர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை குவித்ததையடுத்து, தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் பாராட்டு தெரிவித்தார்.
குருஞானசம்பந்தர் மிஷன் பள்ளியில் நடைபெற்ற மாவட்ட மற்றும் மாநில அளவிலான குத்துச்சண்டை, வாள்வீச்சு, சதுரங்கம் உள்ளிட்ட போட்டிகளில் மாணவர்கள் சிறப்பாகப் பங்கேற்றனர். இதில் 38 மாணவர்கள் தங்கம், 581 பேர் வெள்ளி மற்றும் 59 பேர் வெண்கலப் பதக்கங்களை வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
பதக்கங்கள் வென்ற மாணவர்களை நேரில் சந்தித்த ஆதீனம், அவர்களின் திறமை, கடின உழைப்பு மற்றும் சாதனையை பாராட்டி வாழ்த்துகளை வழங்கினார்.