பாமக வழக்கில் தீர்வு இல்லை என்றால் ‘மாம்பழம்’ சின்னம் முடக்கப்படும் – தேர்தல் ஆணையம்

Date:

பாமக வழக்கில் தீர்வு இல்லை என்றால் ‘மாம்பழம்’ சின்னம் முடக்கப்படும் – தேர்தல் ஆணையம்

பாமக உள்கட்சி மோதல் நீடித்தால், கட்சியின் மாம்பழம் சின்னம் தற்காலிகமாக செயலிழக்க செய்யப்படலாம் என்று தேர்தல் ஆணையம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி குழுவுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் அதிகாரப் பிரச்சினை காரணமாக, அன்புமணி போலி ஆவணங்களை சமர்ப்பித்து கட்சியை தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்துவிட்டார் என்று ராமதாஸ் தரப்பினர் கூறி மனு தாக்கல் செய்திருந்தனர்.

நீதிபதி மினி புஷ்கர்ணா தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டபோது, இரு தரப்பினருக்கும் இடையில் கடும் வாதப்பிரதிவாதங்கள் நடந்தன.

ராமதாஸ் தரப்பில்,

– அன்புமணி தரப்பு தாக்கல் செய்த தகுதிச் சான்றுகள் உண்மையற்றவை

– பாமக கட்சியின் உண்மையான நிறுவனர் ராமதாஸே

என்னும் வாதம் முன்வைக்கப்பட்டது.

இதற்கு மறுப்பாக, அன்புமணி தரப்பு,

– கட்சித் தலைவராக தங்களை பாமக ஏற்கனவே அங்கீகரித்துள்ளது

என்று வலியுறுத்தியது.

இந்த நிலையில், கட்சியின் தலைமை யாருக்கு என்பது குறித்து நேரடி முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என அவர்கள் விளக்கினர். இருப்பினும், “உள் மோதல் தொடர்ந்தால், கட்சித் சின்னம் எவருக்கும் ஒதுக்கப்படாமல் முடக்கப்படும்” என்று ஆணையம் எச்சரிக்கை விடுத்தது.

அனைத்து தரப்புகளின் வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி, பதிவு செய்யப்படாத கட்சிகளின் உள் பிரச்சினைகளில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என்பதை குறிப்பிட்டு, இதற்கான உரிமை தொடர்பான தீர்வை பெற ராமதாஸ் தரப்பு சிவில் நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: 4 மாநிலப் பார்வையாளர்களுடன் பி.எல். சந்தோஷ் தீவிர ஆலோசனை!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: 4 மாநிலப் பார்வையாளர்களுடன் பி.எல். சந்தோஷ்...

அசாமில் சுகோய் போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து: இரண்டு விமானப்படை வீரர்கள் வீரமரணம்!

அசாமில் சுகோய் போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து: இரண்டு விமானப்படை...

இந்தியப் பெருங்கடலில் அதிர்ச்சி: இலங்கை அருகே ஈரானின் ‘ஐஆர்ஐஎஸ் தேனா’ போர்க்கப்பலை அமெரிக்கா மூழ்கடித்தது ஏன்?

இந்தியப் பெருங்கடலில் அதிர்ச்சி: இலங்கை அருகே ஈரானின் 'ஐஆர்ஐஎஸ் தேனா' போர்க்கப்பலை...

தமிழகத்திற்கு 4 புதிய ரயில்கள்: பிரதமர் மோடி மற்றும் அஸ்வினி வைஷ்ணவிற்கு எல். முருகன் நன்றி!

தமிழகத்திற்கு 4 புதிய ரயில்கள்: பிரதமர் மோடி மற்றும் அஸ்வினி வைஷ்ணவிற்கு...