அனுமதியின்றி அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலி

Date:

வேலூர் மாவட்டத்தில், அனுமதியின்றி அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடுக்கத்தூர் அருகிலுள்ள இராமநாயினிகுப்பத்தை சேர்ந்த விவசாயி ஜானகிராமன், தன்னுடைய மூன்று மகன்களுடன் நர்சரி தோட்டப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

அன்றைய தினம் வழக்கம்போல் அவர் தனது மகன்கள் விகாஷ், ஜீவாவுடன் சேர்ந்து வேலை செய்துகொண்டிருந்தார்.

அச்சமயம் ஜானகிராமன் திடீரென கத்தும் சத்தம் கேட்டதால், அவரது மகன்கள் அவர்கள் இருக்கும் இடத்துக்குச் சென்று பார்ப்பதற்கு விரைந்தனர்.

அப்போது அருகிலுள்ள நிலத்தில் சட்டவிரோதமாக பதிக்கப்பட்ட மின் வேலியில் சிக்கிய தந்தையைப் பார்த்த அவர்கள், அவரை மீட்க முயன்றபோது தாமும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மூவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், மின் வேலியை சட்டவிரோதமாக அமைத்திருந்த சங்கர் என்ற நபரை கண்டறிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

நாட்டில் செயல்பட்டு வரும் 12 அரசுத் துறை வங்கிகளை, வெறும் 4 வங்கிகளாக சுருக்கும் முயற்சி

நாட்டில் செயல்பட்டு வரும் 12 அரசுத் துறை வங்கிகளை, வெறும் 4...

முப்படைகள் தளபதி நியமனம்: அறிவிப்பு இல்லாமல் பாகிஸ்தான் அரசியல் குழப்பம்

முப்படைகள் தளபதி நியமனம்: அறிவிப்பு இல்லாமல் பாகிஸ்தான் அரசியல் குழப்பத்தில்! பாகிஸ்தானில் முப்படைகளின்...

தேநீர் கடை தொழிலாளர் மீது போதை இளைஞர் தாக்குதல் — சிசிடிவி காட்சி பரபரப்பு!

தேநீர் கடை தொழிலாளர் மீது போதை இளைஞர் தாக்குதல் — சிசிடிவி...

விஜய் மல்லையா–நீரவ் மோடி உள்ளிட்ட 15 பேருக்கு ‘தப்பியோடிய பொருளாதார குற்றவாளி’ பட்டம் – மத்திய அரசு தகவல்

விஜய் மல்லையா–நீரவ் மோடி உள்ளிட்ட 15 பேருக்கு ‘தப்பியோடிய பொருளாதார குற்றவாளி’...