நூற்றுக்கணக்கான உயிர்களை காவு கொண்ட ‘டிட்வா’ புயல் : கடும் அதிர்ச்சியில் இலங்கை

Date:

நூற்றுக்கணக்கான உயிர்களை காவு கொண்ட ‘டிட்வா’ புயல் : கடும் அதிர்ச்சியில் இலங்கை

டிட்வா புயல் இலங்கையில் மக்களையும் அரசையும் பெரும் குழப்பத்தில் தள்ளியுள்ளது. இந்த நிலையில், அந்நாட்டிற்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் இந்தியா “ஆப்ரேஷன் சாகர் பந்து” எனும் நடவடிக்கையின் கீழ் முதற்கட்டமாக 12 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது. தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்கத் தயாராக இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையை உலுக்கி எடுத்த இந்த புயல் இதுவரை நூற்றுக்கு மேற்பட்டோரின் உயிரை பறித்துள்ளது. மேலும் 150 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பல லட்சம் மக்கள் தங்கள் வாழ்க்கைத் தேவை மற்றும் சொத்துகளை இழந்து அவதியுறுகின்றனர். இதனால் நாடு முழுவதும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேரழிவின் தொடக்கம் நவம்பர் 17-ஆம் தேதி. அன்றைய தினம் இடையறாத கனமழை பல பகுதிகளில் வெள்ளம் பரவச் செய்தது. அதன் பின்னர் உருவான டிட்வா புயல் நாட்டின் நிலையை மேலும் மோசமாக்கியது. பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதும், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்ததும் உயிரிழப்புகள் மேலும் உயரலாம் என அச்சத்தைக் கிளப்பியுள்ளது.

முக்கியமாக கேகாலை பகுதியில் ஏற்பட்ட பெரும் மண்சரிவில் 20 குழந்தைகள் உட்பட 120 பேர் மாயமானது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட யானைகளின் காட்சிகள், இந்த பேரழிவின் தீவிரத்தை வெளிப்படுத்துகின்றன. நாட்டின் பல பகுதிகளில் சாலை இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் மீட்பு பணிகளில் சிரமம் ஏற்பட்டது.

ஆயினும், இராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அனுராதபுரம் சிறைச்சாலை வெள்ளத்தில் சிக்கியதால் கைதிகள் அவதிப்பட்டனர்; உடனடியாக போலீஸ் பாதுகாப்புடன் அவர்களை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றினர்.

இந்நேரத்தில் பல நாடுகள் இலங்கைக்கு உதவி வழங்கி வருகின்றன. குறிப்பாக இந்தியா, “ஆப்ரேஷன் சாகர் பந்து” மூலம் கூடாரங்கள், போர்வைகள், மருத்துவப் பொருட்கள், உணவு உள்ளிட்ட 12 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது. கொழும்பில் உள்ள இந்தியாவின் ஐஎன்எஸ் விக்ராந்த் விமானத்தாங்கி கப்பலில் இருந்து ஹெலிகாப்டர்கள் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

புயல் பாதிப்பில் உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இலங்கை விரைவில் மீண்டு வர வேண்டும் எனத் தெருவிக்கையுடன், மேலும் தேவைப்பட்டால் உதவிக்குத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அதேபோல், வெளிநாட்டு விவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் உதயகிரி கப்பல்கள் நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்று ஒப்படைத்துள்ளதாகவும், இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளும் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

அமலாக்கத்துறை சோதனை தடுப்பு விவகாரம் – மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

அமலாக்கத்துறை சோதனை தடுப்பு விவகாரம் – மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம்...

ரஷ்யாவில் 146 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொடர்ச்சியான பனிப்பொழிவு

ரஷ்யாவில் 146 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொடர்ச்சியான பனிப்பொழிவு ரஷ்யாவில் கடந்த 146...

தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ் சகோதரர்கள்...

தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்

தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் தமிழகத்தில் வாழும் அனைத்து...